Bidyut prabha devi wikipedia
பித்யுத் பிரபா தேவி
பித்யுத் பிரபா தேவி (Bidyut Prabha Devi 12 ஜூலை 1926 - 28 ஜனவரி 1977) இந்தியாவைச் சேர்ந்த ஒடியா கவிஞர் ஆவார். ஒடியா இலக்கியத்தில் சிறந்த பெண் கவிஞர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.
சுயசரிதை
[தொகு]பித்யுத் பிரபா 1926 ஜூலை 12 ஆம் தேதி கட்டாக் மாவட்டத்தில் ஜின்காடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். எழுத்தாளரும் தொகுப்பாளருமான நிமய் சரண் தாஸ் மற்றும் ரேகா தேவியின் இரண்டாவது மகள் இவர் ஆவார். இவரது பெற்றோர், ஒரு பாரம்பரியவாதிகள் மற்றும் பழமைவாதிகள் என்பதால், கட்டாக் நகரத்தின் பம்பிசாஹியில் வசித்து வந்தனர். பித்யுத் பிரபாவுக்கு ஒரு சகோதரரும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர்; அவரது தங்கை புன்யா பிரபா தேவியும் ஒரு எழுத்தாளர் ஆவார்.[1]
இவர் தனது தந்தை நிமய் சரண் தாஸின் உந்துதலால் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது குழந்தை பருவத்தில், அவர் பல பரவலாக அறியப்பெற்ற ஒடியா கவிஞர்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். [2]
ஜூலை 4, 1949 இல், இவர் ஒரிசா செயலகத்தில் பணியாற்றும் பஞ்சனன் மொஹந்தியை மணந்தார்.[3]
படைப்புகள்
[தொகு]பித்யுத் பிரபா 19